மேலும்

சிறிலங்காவின் புதிய அரசு பெறுமதிமிக்க பங்காளி – என்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Sushma-Swarajசிறிலங்காவின் புதிய அரசாங்கம், இந்தியாவின் பெறுமதிமிக்கதொரு பங்காளி என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘சிறிலங்காவின் புதிய அரசாங்கம், பெறுமதியான ஒரு பங்காளி, அதனுடனான இருதரப்பு ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில், சிறிலங்காவுடன் இணைந்து இந்தியா பணியாற்றுகிறது.

இந்தியாவின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்தே, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற போது அயல்நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அதன் பின்னர், முக்கியமான உறவுகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *