கொழும்பு வந்தார் தோமஸ் சானொன் – மங்களவுடன் பேச்சுக்கள் ஆரம்பம்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள, தூதுவர் தோமஸ் சானொன் தற்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.
பங்களாதேசில் இருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தோமஸ் சானொன், இன்று இரவு 6. 45 மணியளவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு வந்தார்.
அங்கு அவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார்.
இதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும், தோமஸ் சானொனுக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இராப்போசன விருந்துடன் கூடிய இந்தப் பேச்சுக்களை அடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.