உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்சில் நடக்காது
உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் நடத்தப்படாது என்னும், எனினும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லை நிர்ணய குழுவின் வர்த்தமானி அறிவித்தலுக்கு சுமார் 700 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த எல்லை நிர்ணயம் மீள மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்கான படிமுறைகளை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் செயற்படுத்துவது கடினம் என்பதனாலேயே இத் தேர்தல் மார்ச் மாதத்திலிருந்து ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதும் எப்போது அது நடக்கும் என்று திட்டவட்டமாக அறிவிக்க முடியாது.
பழைய முறையில் தேர்தல் நடத்துவதும் பிரயோசனமற்றது. எனவே, காலம் தாழ்த்தியாயினும் எவருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்காக மீண்டும் எல்லைகள் வரையறை செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.