இந்திய இராணுவத்தின் தொழில்நுட்ப உதவி – விபரங்களை வெளியிட சிறிலங்கா இராணுவம் மறுப்பு
சிறிலங்கா இராணுவத்தை நவீன மயப்படுத்துவதற்கு, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் அளிக்க முன்வந்துள்ள தொழில்நுட்ப உதவிகள் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ளார்.
சிறிலங்காவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் நடத்திய பேச்சுக்களின் போது, சிறிலங்கா இராணுவத்தின் தேவைகளை தரமுயர்ததுவதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்திய இராணுவத்தின் தொழில்நுட்ப உதவி எத்தகையது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பிய போது, இது மனிதவள அபிவிருத்தி மற்றும் கனரக விடயங்களிலான உதவியாக இருக்கக் கூடும் என்று மட்டும் குறிப்பிட்டார்.
எனினும், மேலதிக தகவல்களை அவர் வெளியிட மறுத்துள்ளார்.