மேலும்

உறவினர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் புலிகளுக்கு உயிரூட்ட அனுமதியோம் – வாசுதேவ

vasudeva-nanayakkaraபோரில் உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருகின்ற போர்வையில் மீண்டும் புலிகளுக்கு உயிரூட்டுவதை அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.

இந்தவாரம் போரில் இறந்த விடுதலைப் புலிகளை நினைவு கூர அவர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நிகழ்த்திய உரை தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று நாளுமன்றத்தில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்த நிலைப்பாடு தொடர்பாக எம்மத்தியில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒருவருக்கு உறவினராக இருக்கும் பட்சத்தில் பிரபாகரனுக்கும் அஞ்சலி செய்ய அனுமதிப்போம்.

ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற பேரில் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட எவரும் எதிர்பார்த்திருப்பார்களாயின் அவர்களை நாம் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *