மேலும்

சர்ச்சையில் சிக்கிய சிறிலங்கா அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகினார்

tilak-marapanaஅவன் கார்ட் சர்ச்சையில் சிக்கிய, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன பதவியை விட்டு விலகியுள்ளார்.

இன்ற காலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதேவேளை, இன்று காலை நடந்த சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில், திலக் மாரப்பன பதவி விலகல் கடிதத்தை கையளிததுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய அவன்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்தில்,  திலக் மாரப்பன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது.

அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியருந்த திலக் மாரப்பன, நாடாளுமன்றத்தில், அவன் கார்ட் விவகாரத்தில் எந்த முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்று வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *