மேலும்

பிள்ளையானை நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

pillayanகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் இன்று  கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலபிட்டிய முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு, தடுத்து வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் அனுமதி கோரினர்.

pillayan-lock (1)pillayan-lock (2)

இதற்கமைய, பிள்ளையானை எதிர்வரும் நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் அனுமதி அளித்தார்.

அதேவேளை, இந்தப் படுகொலை தொடர்பாக முன்னதாக கைது செய்யப்பட்ட பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோருக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள் – லங்காதீப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *