மேலும்

மைத்திரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய மகிந்தவின் தொலைபேசி அழைப்பு

mahinda-maithriசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் நியூயோர்க் புறப்படுவதற்கு சுமார் ஒரு மணிநேரம் முன்னதாக, அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

மறுமுனையில் இருந்து கேட்ட மகிந்தவின் குரல் அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

நாட்டின் சார்பாக, பிரமாண்டமான பணியை முன்னெடுத்துச் செல்லும், சிறிலங்கா அதிபருக்கு, மகிந்த ராஜபக்ச இதன் போது வாழ்த்துக் கூறினார்.

அதன் பின்னர், அவர், எமிரேட்ஸ் விமானம் மூலம் நியூயோர்க் புறப்பட்டுச் சென்றார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *