தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, வன்னி மாவட்ட வேட்பாளர்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா தலைமையிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
வன்னி மாவட்டத்துக்கான வேட்புமனு இன்று பிற்பகல் வவுனியா மாவட்டச் செயலகத்தில், முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதனால் கையளிக்கப்பட்டது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் –
செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்)
சிவசக்தி ஆனந்தன் (வவுனியா)
விநோநோகராதலிங்கம் (முல்லைத்தீவு)
சாள்ஸ் நிர்மலநாதன் (மன்னார்)
றோய் ஜெயக்குமார் (வவுனியா)
திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா (முல்லைத்தீவு),
கந்தையா சிவநேசன்(முல்லைத்தீவு)
த.சிவமோகன் (முல்லைத்தீவு)
க.செல்லத்துரை (வவுனியா)
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது.
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் பொன் செல்வராசா தலைமையில் சென்று வேட்பாளர்கள் இந்த வேட்புமனுவைக் கையளித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள்
பொன்.செல்வராசா (கல்லாறு)
பா.அரியநேத்திரன் (அம்பிளாந்துறை)
சீ.யோகேஸ்வரன் (வாழைச்சேனை)
இரா.துரைரெத்தினம் (காரைதீவு)
கோ.கருணாகரன் (செட்டிபாளையம்)
சிறிநேசன் (மகிழடித்தீவு)
ஏ.ஏ.அமல் (செங்கலடி)
ஜி.சௌந்தரராஜன் (மட்டக்களப்பு)