9 புதிய தூதுவர்களை உறுதிப்படுத்தியது சிறிலங்கா – இருவர் படை அதிகாரிகள், ஒருவர் தமிழர்
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தினால் வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது பேரின் விபரங்கள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது தூதுவர்களில் இரண்டு ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்களும், ஒரு தமிழரும் அடங்கியுள்ளனர்.
இதன்படி,
- தாய்லாந்துக்கான தூதுவராக சேனுகா செனிவிரத்ன
- வியட்னாமுக்கான தூதுவராக, எச்.யு.திசநாயக்க
- சுவீடனுக்கான தூதுவராக ஆர்.டி ராஜபக்ச
- நெதர்லாந்துக்கான தூதுவராக ஏ.எச்.எம்.சாதிக்
- இஸ்ரேலுக்கான தூதுவராக பி. செல்வராஜ்
- பிரேசிலுக்கான தூதுவராக ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய
- பாகிஸ்தானுக்கான தூதுவராக ஜெனரல் தயா ரத்நாயக்க
- ஈரானுக்கான தூதுவராக வை.கே.ரோகணஜித்
- கட்டாருக்கான தூதுவராக கலாநிதி டபிள்யூ.எம். கருணாதாச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஏனைய தூதுவர்களின் பெயர்களை இன்னமும் குறிப்பிட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இராஜதந்திரிகள் அல்லாத- அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற சுமார் 29 நாடுகளுக்கான தூதுவர்களை திருப்பி அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.