மேலும்

சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவு முக்கியத்துவமானது – பாகிஸ்தான் இராணுவத் தளபதி

General Raheel Sharifபாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு  மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், நேற்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் குவேட்டா இராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர்,

“பாகிஸ்தானும் சிறிலங்காவும் சிறப்பான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளன.  இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலமே இரு நாடுகளிலும் அமைதியை உறுதிப்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *