மேலும்

மைத்திரியை சந்திக்க மகிந்தவுக்கு நேரமில்லையாம் – நாளைய சந்திப்பு ரத்து

mahinda-maithriசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்துப் பேசுவதற்காக, இந்தச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான குமார வெல்கம உள்ளிட்ட சிலர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இந்தச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்திருந்தனர்.

நாளை இரவு 7 மணியளவில், இந்தச் சந்திப்புக்கு சிறிலங்கா அதிபரும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால், மகிந்த ராஜபக்சவுக்கு நாளை இறுக்கமான நிகழ்ச்சிகள் உள்ளதாகவும், நேரமின்மையால் இந்தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், குமார வெல்கம தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *