மேலும்

திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர் ரணில்

RANILசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும், இன்னமும் சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை.

இன்று காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினுக்குப் புறப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், ரணில் விக்கிரமசிங்க, புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பிரதமருடன் மேலும் நான்கு பேர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் இந்த திடீர் இந்தியப் பயணம் நோக்கம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *