மேலும்

தாயகம் திரும்பிய 5 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் மீண்டும் தஞ்சம்

Sri-Lankan-Tamil-refugeesதிருக்கோணமலையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக படகு மூலம் இன்று தமிழ்நாட்டை வந்தடைந்தனர்.

சத்தியசீலன், அவரது மனைவி பரமேஸ்வரி, இவர்களின் மகள்களான விடுதலைச்செல்வி, மேரி, அஞ்சலிதேவி ஆகிய ஐவருமே தனுஸ்கோடி, அரிச்சல்முனைக் கடற்கரையை அடைந்தனர்.

இவர்கள், 1999ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் அகதி முகாமில் தங்கியிருந்தனர்.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், 2010ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் மீண்டும் தாயகம் திரும்பிச் சென்றனர்.

எனினும், அங்கு வாழ்க்கை நிலை நல்லதாக இல்லை என்றும், தமக்கென வீடு கூட வழங்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *