9 மாதங்களில் மத்தல விமான நிலையம் ஊடாக 30 ஆயிரம் பேரே பயணம்
சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையத்தின் ஊடாக, கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையான 9 மாதங்களில், சுமார் 30 ஆயிரம் பயணிகள் மாத்திரமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
2014ம் ஆண்டு ஜனவரி தொடக்கம், செப்ரெம்பர் வரையான காலப் பகுதியில், 13,371 பயணிகள் மாத்திரமே மத்தல விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில், 16,712 பயணிகள், மத்தல விமான நிலையம் வழியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் இதே காலப்பகுதியில் சிறிலங்காவின் முதல் அனைத்துலக விமான நிலையமான கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையம் வழியாக, 5.3 மில்லியன் பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர் என்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.