மேலும்

திருக்கோணமலைத் துறைமுகத்தில் 4 இந்தியக் கடற்படைக் கப்பல்கள்

indian-navy-ships (1)இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.

நாளை மறுநாள் 30ம் நாள் வரை திருக்கோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இந்தக் கப்பல்களில் உள்ள இந்திய கடற்படை மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

ரிர், கேசரி, சுதர்சினி ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், வருண என்ற இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலுமே, திருக்கோணமலைக்கு வந்துள்ளன.

indian-navy-ships (1)

indian-navy-ships (2)

indian-navy-ships (3)

indian-navy-ships (4)

இவற்றில் சுதர்சினி என்ற கப்பல், பாய்மரங்கள் பொருத்தப்பட்ட இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பலாகும்.

இந்தியக் கடற்படைக் கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

அதையடுத்து, சிறிலங்கா இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன.

படங்கள் – எஸ்.எஸ்.குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *