இந்தியப் போர்க்கப்பல்கள் திருக்கோணமலைக்கு வருகின்றன
மூன்று நாள் பயணமாக இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படையணியைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரிர், கேசரி ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படையின் வருண என்ற கப்பலும், கடல் பயண பயிற்சிக் கப்பலான சுதர்சினியுமே இன்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளன.
இந்தக் கப்பல்கள் திருக்கோணமலையில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சி, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பங்கெடுப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.