மேலும்

வெள்ளியன்று கி.பி. அரவிந்தன் அவர்களின் இறுதி நிகழ்வு

aravinthanகடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.

கி.பி அரவிந்தன் அவர்களின் உடல் நாளையும் மறுநாளும் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்படும்.

நாளை புதன்கிழமையும், நாளை மறுநாள் வியாழக்கிழமையும், Centre hospitalier Victor Dupouy, 69 rue du Lieutenant – colonel Prudhon, 95107 Argenteuil, France என்ற முகவரியில், பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை, கி.பி அரவிந்தன் அவர்களின் உடல், பார்வைக்காக வைக்கப்படும்.

அதையடுத்து, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில், அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *