மேலும்

விடுதலைப் புலிகளின் கோட்டைக்கு எதற்காகச் செல்கிறார் மோடி? – ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’

Narendra-Modiசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளது, தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யக் கூடும்.

வரும் 12-ஆம் நாள் மொரிசியசில் இருந்து இந்தியப் பிரதமர் கொழும்பைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் கைது செய்யப்பட்டுள்ளதால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில்,  இந்தியப் பிரதமர் மாலைதீவுக்குச் செல்வாரா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக சவுத் புளொக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டைக்கு இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ள பயணம், தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

தென்னிந்தியாவில் தனது பலத்தைப் பெருக்குவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது.” என்றும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஒரு கருத்து “விடுதலைப் புலிகளின் கோட்டைக்கு எதற்காகச் செல்கிறார் மோடி? – ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’”

  1. இ.தேவகுரு says:

    “சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளது, தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.”

    செல்லவுள்ளது என்னும்போது, அது உயிரற்ற பொருளையே குறிக்கும். ஆனால் இங்கே செல்லவுள்ளவர் உயிருள்ள பொருளாகிய மோடி. எனவே யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என எழுதப்படவேண்டும்.

    தமிழை இலக்கணப்படி எழுத தெரியாத பலர் பத்திரியாளர் களாக தொழில் புரிய முனைவதால் தமிழ் சீரழிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *