சீனாவுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் சிறிலங்கா – சீனப் பிரதமர் நம்பிக்கை
சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டுக்கு உகந்த சூழலை சிறிலங்கா ஏற்படுத்தும் என்று நம்புவதாக சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சீன பிரதமர் லி கெகியாங் நேற்று பிங்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சீனப் பிரதமர் லி கெகியாங், “இருநாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனாவின் முதலீடுகளுக்கு உகந்த சூழலை சிறிலங்கா ஏற்படுத்தும் என்றும் சீனப்பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக, சீனத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.