வெலிக்கடைச் சிறையில் மகிந்த ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்து நலன் விசாரித்தார்.
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரியான அமரவீரவையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பின்னர் வெளியே வந்த அவரிடம், நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை போட்டியிட வைக்கும் முயற்சிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “வரும் 18ம் நாள் நுகேகொடவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கூறும் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
நான் இப்போது எனது சொந்த ஊரில் இருந்து வருகிறேன். அத்தகைய கூட்டம் குறித்த தகவல் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.