சிறிலங்கா மீதான தடை விலக்கப்படவில்லை
சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக விலக்கியுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு நிராகரித்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை, ஆறு மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வேதாராச்சி தெரிவித்திருந்தார்.
ஆனால்,அத்தகைய தகவல் ஏதும் தமக்கு கிடைக்கவில்லை என்று சிறிலங்காவின் உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுபற்றிய எந்த முடிவும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், சிறிலங்காவில் இருந்து மீன் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை இன்னமும் தொடர்வது தமக்குத் தெரியும் என்றும், உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது.