சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் அமெரிக்க பதில் தூதுவர் சந்திப்பு
சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுடன் கொழும்பிலுள்ள பதில் அமெரிக்கத் தூதுவர் அன்ட்ரூ மான் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ்சும் கலந்து கொண்டார்.