மேலும்

வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பாதுகாப்புக் செயலர் ஆலோசனை

Defence-Advisers-meet-basnayake (1)சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் நேற்று தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

புதிய பாதுகாப்பு செயலராகப் பதவியேற்ற பின்னர், வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பஸ்நாயக்க நடத்தியுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.

அவுஸ்ரேலிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஜாசன் சீயர்ஸ், பங்களாதேஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஸா அஸ்லாம் பர்வேஸ், சீனத் தூதரகத்தில் உள்ள இராணுவ,கடற்படை, வான்படை ஆலோசகர், மூத்த கேணல் லீ செங்லின், இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன்,  ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகரும், அரசியல் விவகாரச் செயலருமான கப்டன் மோரோட்சுகு சிகேகாவா, பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமட் ரஜில் இர்ஸாட் கான், அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ் ஆகியோரே நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

Defence-Advisers-meet-basnayake (1)

Defence-Advisers-meet-basnayake (2)

Defence-Advisers-meet-basnayake (3)

இருதரப்பு விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆராயப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *