மேலும்

வாக்களிப்பு முடிவுக்கு வந்தது

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு சற்று முன்னர் முடிவடைந்துள்ளதாக, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து. வாக்குப் பெட்டிகளுக்கு முத்திரையிட்டு, வாக்கு எண்ணும், நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பெட்டிகள் அனைத்தும், வந்து சேர்ந்த பின்னரே, வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய தேர்தலில் சராசரியாக 60 வீதம் வரையிலான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், அதிகாரபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *