மேலும்

தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்ற 5 தமிழர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை

tamils-sentenceமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தமிழ்நாட்டைச் வந்தடைந்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்குஉள்ளூர் நீதிமன்றத்தினால் தலா இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், தனுஸ்கோடியைச் வந்தடைந்த மூன்று ஆண்களும், இரண்டு பெண்களுமாக ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு சட்டத்தின் கீழும், வெளிநாட்டினர் சட்டத்தின் கீழும் தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 100 ரூபா அபராதமும் இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்பதால், ஒரு ஆண்டு இவர்கள் சிறையில் இருக்க வேண்டும்.

கே.சுதாகரன் (வயது-35), அவரது மனைவி எஸ்.ரமீகா (வயது-32), எஸ்.தயாபரராஜா (வயது 33), அவரது மனைவி உதயகலா மற்றும் எஸ்.தவேந்திரன் (வயது) ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்தவர்களாவர்.

tamils-sentence

இவர்களுடன் வந்த, இவர்களின்  ஐந்து குழந்தைகளில், பத்து வயதுக்குட்பட்ட இரண்டு பேரை பெற்றோருடன் இருக்க அனுமதித்துள்ள நீதிமன்றம், ஏனைய மூவரையும், குற்றவாளிகளில் ஒருவரின் தாயாருடன் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஐந்து பேரும், புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *