புதிய அரசியலமைப்பை உருவாக்கமாட்டாராம் மைத்திரி
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார். நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிலேயே அவரால் திருத்தங்களைச் செய்ய முடியும் என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவமைத்திரிபால சிறிசேனதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது செல்லும்.
இதனால் மைத்திரிபால சிறிசேன 100 நாட்களுக்குள் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் திருத்தத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
சிறிலங்கா அதிபரின் கைகளிலுள்ள அனைத்து அதிகாரங்களும் ஒழிக்கப்படக் கூடாது.
நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட அதிகாரங்களை சிறிலங்கா அதிபர் கொண்டிருக்க வேண்டும்.
அனைத்து அரசியல்கட்சிகளையும் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு எதிரணியினர் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டும் என தான் உறுதியாக நம்புவதாகவும் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.