மேலும்

Tag Archives: சோபித தேரர்

சோபித தேரரின் இறுதி விருப்பம் மீறப்பட்டதா? – பரபரப்பை ஏற்படுத்திய காணொளிக்கு சங்கநாயக்கர் பதில்

மறைந்த வண.மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச் சடங்கு, அவரது இறுதி விருப்பத்துக்கு அமைய இடம்பெறவில்லை என்று, அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்கான சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக சிறிஜெயவர்த்தனபுர மகா சங்கநாயக்கர் வண. மீகஹதென்னே, சந்திரசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

மரணத்துக்குப் பிந்திய விருப்பம் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சோபித தேரரின் காணொளி

தனது உடலை தகனம் செய்யாமல், உறுப்புகளை தானம் செய்த பின்னர் புதைக்க வேண்டும் என, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரர் விருப்பம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரி வாக்குறுதி – உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோபித தேரர்

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளருமான கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண.மாதுளுவாவே சோபித தேரர், கைவிட்டுள்ளார்.

19வது திருத்தத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதிக்கிறார் சோபித தேரர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி வண மாதுளுவாவே சோபித தேரர், இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கமாட்டாராம் மைத்திரி

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார். நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிலேயே அவரால் திருத்தங்களைச் செய்ய முடியும் என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.