மகிந்தவை பதவியில் இருந்து அகற்றும் மேற்குலக சூழ்ச்சிக்கு மைத்திரியும் உடந்தை
தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றும் அனைத்துலக சூழ்ச்சியில் மைத்திரிபால சிறிசேன தரப்பும் தொடர்புபட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.
“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறை அதிபராகத் தெரிவு செய்யப்படாமல், போனால் தான், ஐ.நாவின் தண்டனையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று ஐதேக கூறியுள்ளது.
கொழும்பில் உள்ள மேற்குலக தூதரகங்களுடன் ஆலோசனை நடத்தாமல், எதிரணியினால் இத்தகையதொரு அறிவிப்பை வெளியிட முடியாது.
தற்போது ஐ.நாவினால் முன்னெடுக்கப்படும் சிறிலங்காவுக்கு எதிரான விசாரணைகள் குறித்த தெளிவான விளக்கத்தை எதிரணியினர் அறிவிக்க வேண்டும்.
போர் தொடர்பாகவும், ஜெனிவா விவகாரம் தொடர்பாகவும், எதிரணியினர் ஒன்றுக்கொன்று முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.