மேலும்

புரளி கிளப்பிய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க – முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்

Sri_Lanka_Muslim_Congressசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டியில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தார்.

அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின் இந்தக் கூற்றை நிராகரித்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பேச்சாளர், நிசாம் காரியப்பர், தமது கட்சி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

“முஸ்லிம் காங்கிரசின் உயர்நிலைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடத்த திட்டமிட்ட போதும், அது நடைபெறவில்லை.

அந்தக் கூட்டம் எப்போது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *