மேலும்

அரசுப் பக்கம் தாவவில்லை – சந்திராணி பண்டார மறுப்பு

tissa-chandraniதிஸ்ஸ அத்தநாயக்கவுடன் ஆளும்கட்சிக்குத் தாவியதாக வெளியான செய்திகளை, ஐதேகவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, மறுத்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் நடந்த எதிரணியின் செய்தியாளர் சந்திப்பில், பங்கேற்ற நாடாளுமன்ற சந்திராணி பண்டார, தாம் கட்சி தாவியதாக வெளியான செய்திகள் வெறும் வதந்தியே என்று குறிப்பிட்டார்.

தாம் ஐதேகவிலேயே பிறந்ததாகவும்,  ஐதேக பின்புலத்திலேயே வளர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்ட சந்திராணி பண்டார, தாம் கட்சி தாவுவதை தனது தந்தையோ ஆதரவாளர்களோ ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

tissa-chandrani

திஸ்ஸ அத்தநாயக்கவின் நெருங்கிய நண்பரான சந்திராணி பண்டார, தனது மகனுக்கு வெளிநாட்டில், இராஜதந்திரப் பதவி ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கதாக ஆளும்கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *