வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகள் கொழும்புக்கு அழைப்பு
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தினால், அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்களே இவ்வாறு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவுக்கான தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க, ஜப்பானுக்கான தூதுவர் அட்மிரல் வசந்த கரன்னகொட, சிட்னியில் உள்ள தூதரக அதிகாரி பந்துல ஜெயசேகர, கன்பராவில் உள்ள துணைத் தூதுவர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, ரஸ்யாவுக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோரே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது பற்றிய விபரங்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிடாமல் மறைத்து வருகிறது.
வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற இராஜதந்திரிகளில் மேலும் ஒருதொகுதியினர் விரைவில் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளனர்.
அதேவேளை. சிறிலங்காவில் அதிபர் தேர்ல் முடிவடையம் வரையில், வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விடுமுறையில் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.