ரிசாத் பதியுதீன் கட்சி மகிந்தவுக்கு ஆதரவு
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஆதரவு வழங்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இன்று அலரி மாளிகையில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் குழு பேச்சுக்களை நடத்தியுள்ளது.
இதன்போதே, இந்த முடிவு தெரியப்படுத்தப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசினால், சில யோசனைகள் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், அவரவர் தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது என்றும், அந்த உரிமை பாதுகாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் உறுதியளித்துள்ளார்.