மேலும்

இந்தியப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா வருவதில் இழுபறி

India-srilanka-Flagதென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு,  திட்டமிட்டது குறித்து சிறிலங்காவில் விசாரணை நடத்த இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு அனுமதி கோரியுள்ளது.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பணியாற்றிய அதிகாரியான அமீர் சுபார் சித்திக் மூலம், பாகிஸ்தான் உளவு பிரிவு இந்த சதித் திட்டத்தை தீட்டியதாக இந்திய புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்காவுக்கு செல்வதற்கு இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு இந்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.

எனினும் மூன்று மாதங்களாகியும், இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கை நிலுவையில் உள்ளது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இன்னமும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவில்லை என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்த்தாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *