மகிந்தவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ராஜகிரியவில் உள்ள சிறிலங்கா தேர்தல் செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேம் ஜெயந்த இந்த கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.
அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, தினேஸ் குணவர்த்தன ஆகியோரும், இதன்போது தேர்தல் செயலகத்துக்குச் சென்றிருந்தனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் யூ.அமரதாச, இதுவரை ஐந்து வேட்பாளர்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
வண.பத்தரமுல்ல சீலாரத்ன தேரர், பெமினிமுல்ல, சிறிதுங்க ஜெயசூரிய, பானி விஜேசிறிவர்த்தன ஆகியோரே கட்டுப்பணம் செலுத்திய ஏனையோராவார்.
வரும் 8ம் நாள், வேட்புமனுக்கள் காலை 9 மணிக்கும், 11 மணிக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அன்று காலை 9 மணிக்கும், 11.30 மணிக்கும் இடையில்அவற்றைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.