நேபாளம் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை நேபாளத்தைச் சென்றடைந்தார்.
நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபருக்கு, அங்கு நேபாள அரசாங்கத்தினால் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகாரச்செயலர் செனுகா செனிவிரத்ன, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் நேபாளம் சென்றுள்ளனர்.