மேலும்

நேற்று முடிவெடுத்தது ஹெல உறுமய – இன்று அறிவிப்பு

Rathana-Sobhithaசிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஜாதிக ஹெல உறுமய தாம் முக்கிய முடிவென்றை எடுத்துள்ளதாகவும், அதுபற்றி இன்று முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் நடந்த ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இன்று அந்த முடிவை பகிரங்கமாக அறிவிக்க ஜாதிக ஹெல உறுமய திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்அறிவித்திருந்தார்.

மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ வாகனத்தையும், அவர் மீள ஒப்படைத்திருந்தார்.

நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை ஒழித்தல் உள்ளிட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஹெல உறுமய சிறிலங்கா அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்துள்ளது.

அண்மையில் நடந்த வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பையும், ஹெல உறுமய புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *