மேலும்

Archives

சிறிலங்கா அதிபர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் முக்கிய கூட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் சிறிலங்காவுக்கு 108ஆவது இடம்

பூகோள சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் (Environmental performance index) சிறிலங்கா 108ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது என்று சிறிலங்கா அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான மூலோபாயக் கலந்துரையாடல் நிறைவு

இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான இரண்டாவது மூலோபாயக் கலந்துரையாடல் முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சீபா, எட்கா உடன்பாடுகளால் ஆசியாவுக்கு நன்மை – சிறிலங்கா பிரதமர்

சிங்கப்பூர்-இந்தியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடும்(சீபா) , இந்தியா- சிறிலங்கா இடையில் கையெழுத்திடப்படவுள்ள பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடும் (எட்கா), தெற்காசியப் பிராந்தியத்துக்கு நன்மையளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிங்களவர்களின் நிம்மதி யார் கையில்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

சிறிலங்காவில் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இங்கு வாழும் ஏனைய இன மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிங்கப்பூர் தலைவர்களை சந்தித்தார் சிறிலங்கா பிரதமர் – 5 உடன்பாடுகளும் கையெழுத்து

மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

சிங்கப்பூரில் சிறிலங்கா பிரதமர் – இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறார்

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயற்படவில்லை – கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படத் தவறியிருக்கிறது என்று, மன்னாரில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒபாமாவின் ஏமாற்றமளிக்கும் சிறிலங்கா பற்றிய கொள்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது.