இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் சந்திப்பு
இந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரிகள் குழுக்களின் தலைவரான, எயர் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே, சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரிகள் குழுக்களின் தலைவரான, எயர் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே, சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில், வழக்கத்துக்கு மாறாக கண்டிய நடனத்தை உட்புகுத்த முனைந்ததால், தமிழ்- சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரான்சின் தென்பகுதி நகரான நைசில் நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று முறைப்படி பதவி விலகியதையடுத்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக, தெரசா மே பதவியேற்றார்.
அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார்.