மேலும்

Archives

நீண்ட பயணத்தின் ஆரம்பநிலையிலேயே சிறிலங்கா நிற்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டுக்குள் பொதுமக்களின் காணிகள் ஒப்படைக்கப்படும் – மங்கள சமரவீர

வடக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் கையளிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் உறுதியளித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றது.

போரில் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் பாரதூரமானது – மங்கள சமரவீர

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயமாக இருக்கும் என்று, சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது குறித்து சிறிலங்கா அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சி

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அளித்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவை சீனாவில் சந்தித்த சிறிலங்கா அமைச்சர் – கொழும்பு வருமாறு அழைப்பு

சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சீனாவில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

‘தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்’– ஒரு முன்னாள் பெண் போராளியின் ஆதங்கம்

போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து மீண்டும் இயல்பான வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.

உக்ரேனுடன் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் உடன்பாடு – மகிந்தவுக்கு அடுத்த ஆப்பு

சிறிலங்காவில் தேடப்படும்- உக்ரேனில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கொழும்பிடம் கையளிப்பதற்கு வசதி செய்யும், உடன்பாடு ஒன்று சிறிலங்காவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஜப்பான் விமான நிலையத்தில் மகிந்தவுக்கு உடற்சோதனை

ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, நரிடா விமான நிலையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.