மேலும்

Archives

45 ஆவது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். வொசிங்டனில் நேற்று நடந்த இந்த விழாவில், அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ஜி.ரொபேர்ட்ஸ், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சக்கட்டத்தில் ஏறு தழுவுதல் ஆதரவுப் போராட்டம் – பணிகின்றன மத்திய, மாநில அரசுகள்

ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – அல் ஹுசேன்

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை சிறிலங்கா குணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் சிறிலங்கா கடற்படை தளபதியுடன் பேச்சு

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஏறுதழுவுதல் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கிளிநொச்சியில் நேற்றுமாலை நடந்த ஏறுதழுவுதல் தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஊடகத்துறை மாணவன் விபத்து ஒன்றில் சிக்கி மரணமானார்.

சிறிலங்காவில் கால் வைக்கிறது சீ்னாவின் அலிபாபா

உலகின் மிகப் பிரபலமான சீன இணைய வணிக நிறுவனமான அலிபாபா, சிறிலங்காவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

வடக்கு, கிழக்கில் ஏறுதழுவுதலுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள்

ஏறுதழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்துள்ள பெரும் போராட்டத்துக்கு, உலகத் தமிழர்களின் பேராதரவு கிடைத்துள்ள நிலையில், இன்று கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.

சிறிலங்காவுடன் மீண்டும் இணைகிறார் எரிக் சொல்ஹெய்ம் – ரணில் சந்திப்பு

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்தும் பேச்சுக்களில் நடுநிலையாளராக கலந்து கொண்ட நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முடன், மீண்டும் இணைந்து செயற்பட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.