மேலும்

Tag Archives: படுகொலை

போர்க்குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை

பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய  கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

சிறிலங்காவில் நம்பகமான பொறுப்புக்கூறலை வலியுறுத்துகிறார் கனடியப் பிரதமர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலை நினைவுகூரலை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

அனைத்துலக ஊடக சுதந்திர நாளான இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை நடத்தக் கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

‘லலித் அத்துலத் முதலி படுகொலை – முழு உண்மை’ நூல் வெளியிடப்படவுள்ளது

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான லலித் அத்துலத்முதலியின் படுகொலை பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளது.

கிளிநொச்சியில் மாமனிதர் சிவராம் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் – ஒப்புக்கொள்ளும் கோத்தா

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை பிரதான சந்தேக நபருக்கு, இராஜதந்திரப் பதவியை தாம் வழங்கியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்காது – என்கிறார் கோத்தா

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்காது என்றும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியேயே அதிகப்படுத்தும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மீனவர் படுகொலையால் கொந்தளிக்கும் தமிழ்நாடு – இந்திய- சிறிலங்கா உறவுகளுக்கு சவால்

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவுக் கடலில் நேற்றுமுன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.