ட்ரம்பின் சிறப்புத் தூதுவருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும், வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் பணியகத்தின் பணிப்பாளருமான செர்ஜியோ கோரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.