அல்லைப்பிட்டியில் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி
யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியால், 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணமே அதிகளவில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
33 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கில் சிறிலங்கா சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவில் கூட்டுவன்புணர்வுக்குப் பின்னர் மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.