மூன்றாவது தடவையும் போட்டியிடலாம் – மகிந்தவுக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.
மூன்றாவது தவணைக் காலத்துக்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்த சட்டவிளக்கத்தை, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் நேற்றிரவு அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையும் தான் போட்டியிட முடியுமா என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுத்திருந்த கோரிக்கைக்கு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இன்று பதில் அளிக்கவுள்ளது.