நம்பிக்கையில்லா பிரேரணையை தட்டிக்கழிக்க அரசாங்கம் முயற்சி
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் தட்டிக்கழிக்க முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில், மட்டக்களப்பு காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து பெறப்பட்ட தகவல்களைப் புறக்கணித்தார் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்த்தனவை, சிறிலங்கா காவல்துறை சேவையில் இருந்து நீக்கும் முடிவு நியாயமற்றது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர், மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, காவல்துறை சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுவதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.