மேலும்

Tag Archives: ஈஸ்டர் ஞாயிறு

அடுத்த கைது கோட்டா தான்- அடித்துச் சொல்கிறார் வீரவன்ச

அடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை  கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்  விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலேவை 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதும் விளைவுகளும்

சிறிலங்கா அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே,  கைது செய்யப்பட்ட சம்பவம், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, நீண்ட மற்றும் வேதனையான நீதிக்கான தேடலில் ஒரு அதிர்வு மாற்றத்தைக் குறிக்கிறது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது- கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.

சுரேஷ் சாலே மீது பாய்ந்த பயங்கரவாத தடைச் சட்டம்- 3 நாள்கள் தடுப்புக்காவல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின்  (SIS) முன்னாள் தலைவரான  மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலக்கெடுவிற்குள் முன்னேற்றங்கள் நிகழவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளிப்படுத்துவதாக உறுதியளித்த போதும்,  அந்த விசாரணைகளில் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  குற்றம்சாட்டியுள்ளது.

சாரா ஜஸ்மின் மரணத்தை உறுதிப்படுத்த மீண்டும் மரபணுச் சோதனை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களில் ஒருவரான சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் உயிரிழந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு மரபணுப் பரிசோதனை நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக,  முன்னாள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரி கேணல் கே.எஸ். மத்துமகேவை கைது செய்வதைத் தடுக்கும், இடைக்கால உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் -பயணத் திட்டம் குழம்பியது

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்  பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.