மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரி கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும்  விசாரணைகளின் அடிப்படையில், மட்டக்களப்பு காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு நேற்று இதுகுறித்து தகவல் அளித்துள்ளது.

வவுணதீவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் சாய்ந்தமருதில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்களை மறைத்தது, தவறான குறிப்புகளை வெளியிட்டதன் மூலம் விசாரணையை திசைதிருப்பியது, ஆதாரங்களை மறைத்து, முக்கியமான தகவல்களை வெளியிடத் தவறியதற்காக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவு  தெரிவித்துள்ளது.

முன்னாள் காவல் நிலைய பொறுப்பதிகாரி தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல்  உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார், தேவைப்பட்டால், மேலும் விசாரணைக்காக தடுப்புக் காலத்தை நீடிக்க நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *