மேலும்

Tag Archives: ஈஸ்டர் ஞாயிறு

தெரிவுக்குழு விசாரணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும்  இந்த தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் உதவியுள்ளனரா என்பது குறித்து விசாரிக்க, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது.

ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக சிஐடி விசாரணை – சட்டமா அதிபர் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.

அரச கட்டமைப்புகளுக்குள் சஹ்ரான் குழு ஊடுருவல் – நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளரும் கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அகமட் முவாத்தின் மனைவி, முதலாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு சீனா பாரிய உதவி – மைத்திரியிடம் சீன அதிபர் உறுதி

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும்,  தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சீனா உறுதி அளித்துள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார்.

தாக்குதல்களுக்குப் பொறுப்பான தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – கர்தினால்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நாளை சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள்

இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய  பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று தற்கொலைக் குண்டுதாரிகள் குறித்து மரபணுச் சோதனைக்கு உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு நாளன்று கொழும்பில் மூன்று விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, மரபணுச் சோதனைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.