மேலும்

வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

vasudeva-nanayakkaraநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் மிக முக்கிய பங்காற்றியவர் வாசுதேவ நதாணயக்கார.

அவரது ஜனநாயக இடதுசாரி முன்னணி இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகிறது.

இந்த தேர்தலில், போட்டியிடுவதற்காக வாசுதேவ நாணயக்கார கொழும்பு, கம்பகா, மொனராகல உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வேட்பாளர்களின் பட்டியலைக் கையளித்திருந்தார்.

ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வாசுதேவ நாணயக்காரவுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது.

இது அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *