மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது.
சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவையும், சபாநாயகர் கரு ஜெயசூரியவையும், பாகிஸ்தான் தூதுவர் கலாநிதி சாஹிட் அகமட் ஹஸ்மட் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் அரசியல் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜேவிபியினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேயிடம், வலியுறுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரக் குழுவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய மூன்று உறுப்பினர்களை நியமித்துள்ளார்.