மேலும்

Tag Archives: மனித உரிமைகள்

இராணுவத்தை வெளியேறக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்கு உள்ளது – நாடாளுமன்றில் சம்பந்தன்

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில், தனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கும் அதனை வலியுறுத்துவதற்கும் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலால் உள்ளக விசாரணை தாமதம் – மங்கள சமரவீர

சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதால், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படுவதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடுகளின் மனித உரிமைகள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை இன்று வெளியாகிறது

உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மிக முக்கியமான அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் – முதலமைச்சர் குற்றச்சாட்டு

வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவது தீவிரமான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உரிமைகள், ஜனநாயகம், பொறுப்புக்கூறல் குறித்து சிறிலங்காவுடன் அமெரிக்கா பேச்சு

சிறிலங்கா அரசாங்கத்துடன், மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் குறித்து, அமெரிக்கா கலந்துரையாடியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றமாம் – சொல்கிறார் சமந்தா பவர்

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மனித உரிமைகள் குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா உடனடியாக ஈடுபட வேண்டும் – ஜோன் கெரி

மனித உரிமைகள் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விரைவில் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

புதிய போர்க்குற்ற விசாரணை – வாக்குறுதி அளிக்கிறார் மகிந்த

எதிரணியின் கடுமையான போட்டிக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த பதவிக்காலத்தில் புதிய போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார்.

சிறிலங்காவை வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடை அவசியம் – ரிச்சர்ட் ஓட்டாவே

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவர் தலைவர் ரிச்சர்ட் ஓட்டாவே தெரிவித்துள்ளார்.